இன்றும் நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
இன்றும் நாளையும் வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 29, 30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி  செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here