தபால் அலுவலக முதலீட்டாளர்களே., புதிய நிதியாண்டின் வட்டி விகிதம்? மத்திய நிதியமைச்சகம் வெளியீடு!!!

0
தபால் அலுவலக முதலீட்டாளர்களே., புதிய நிதியாண்டின் வட்டி விகிதம்? மத்திய நிதியமைச்சகம் வெளியீடு!!!

இன்றைய காலகட்டத்தில் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட நிரந்தரமில்லாத முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் சேமிப்பு திட்டங்களையே பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு முடிவடைய உள்ளதால், அடுத்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த காலாண்டு போலவே (1 ஜனவரி 2024 முதல் 31 மார்ச் 2024 வரை), புதிய நிதியாண்டின் முதல் காலாண்டிலும் (1 ஏப்ரல் 2024 முதல் 30 ஜூன் 2024 வரை) வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்படி சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.2 எனவும், பிபிஎஃப் உள்ளிட்ட பல்வேறு தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் முன்பு போலவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here