சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி கடந்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தீவிரம் எடுத்துள்ளதாம். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழைக்கு 1 வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள சில பகுதியில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதோடு மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டியிருக்கும் கடற்கரை பகுதியில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!