தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. இந்நிலையில் சதத்திற்கு அருகில் இருந்து வந்த பெட்ரோல் விலை இன்று அதை தாண்டி போய்விட்டது. அதாவது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 33 காசுகள் அதிகரித்து 100.13ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் 93.72ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து விட்டது. கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை 5 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இந்த விலை ஏற்றம் வாகன ஓட்டிககளை பெரிதும் பாதித்து உள்ளது. அதாவது இந்த விலை அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. மேலும் இதன் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணெய் நிறுவங்களே பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியதில் இருந்து இவற்றின் விலை தினமும் மாற்றத்தை சந்திக்கின்றது. சதத்தை தொடும் நிலையில் இருந்த பெட்ரோல் விலை இன்று அதை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 33 காசுகள் அதிகரித்து, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலையே நீடிக்கிறது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.93.72 விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றம் மக்களை புலம்ப வைத்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்