சரிவை நோக்கி தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். இதனால் வரலாறு காணாத அளவு உயர்ந்து இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளது.

இன்றைய விலை:

உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மீட்டெடுக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆம், அந்த அளவிற்கு பொருளாதராத்தை ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா. இதனால் பல முக்கிய தொழில்கள் அடிமட்டத்திற்கு சென்றதால் முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் திரும்பியது. அதில் முக்கியமானவை தங்கம், வெள்ளி. உலக அளவில் தங்கத்தின் மதிப்பு எப்பொழுதும் குறையாது என்பதால் அதன் மீது முதலீடுகள் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது. இதன் விளைவாக அதன் விலையும் விண்ணைத் தொட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

இந்திய சுப நிகழ்ச்சிகளில் முக்கிய ஆபரணமாக விளங்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊரடங்கு காலத்தில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களும் தங்க நகைகளின் விலையைக் கேட்டு ஆடிப்போயினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

மெத்தனால் கலந்த சானிடைசர் பயன்படுத்துவதால் பார்வையிழப்பு ஏற்படும் – சி.ஜி.எஸ்.ஐ அறிக்கை!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 48 ரூபாய் குறைந்து ரூ. 4,916 க்கும், ஒரு சவரன் 384 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1.80 குறைந்து 74.90 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here