ஆபரணத் தங்கத்தின் விலை இந்த புத்தாண்டில் இருந்தே ஏறிய வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்ததால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. வரலாற்றில் முதல் முறையாக சவரன் 33 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது.
இன்றைய விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து ரூ.31,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சவரன் 31,888 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விலை எறியுள்ளதால் மக்கள் கவலையடைந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |