மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

0

கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்தியது. தொற்று அச்சத்தால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலிக்க ரியல் எஸ்டேட் போன்ற பிற பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்க நகை விலையும் பன்மடங்கு உயர்ந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஊரடங்கு காலத்தில் சிறிய பட்ஜெட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களுக்கும் தங்கத்தின் விலை பெரிய அதிர்ச்சியை அளித்தது. வரலாறு காணாத அளவு உயர்ந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதனால் நடுத்தர மக்களுக்கு தங்க நகை வாங்குவது வெறும் கனவாக மட்டுமே இருக்குமோ? என சோகத்தில் ஆழ்ந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீஎன்ட்ரி கொடுக்கும் மீனா – வீடியோ காலில் ஷூட்டிங்!!!

தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் தொழில் துறைகள் இயங்க தொடங்கி உள்ளன. இதன் விளைவாக இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது. இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து ரூ.4,800க்கும், ஒரு சவரன் ரூ.48 குறைந்து ரூ.38,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.63.90 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here