நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்து உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1950 என்ற எண்ணில் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் தொடர்பான விவரங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வில் எளிதில் வெற்றி பெற இத பண்ணுங்க.., சூப்பர் அப்டேட்!!!