விலை உயர்ந்த பொருட்கள் அல்லது நமக்கு இஷ்டப்பட்ட பொருட்களை நமது கவனக் குறைவால் தொலைத்திருந்தால் அதனை திரும்ப பெற சில வழிபாடுகள் உள்ளன. மேலும் நினைத்தது நிறைவேற மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்ட ஆஞ்சநேய வழிபாடு நல்ல பலனை தரும்.
ஆஞ்சிநேயர் வழிபாடு:
கடவுள் வழிபாடு என்பது எப்பொழுதும் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். முழுமனதுடன் ஒரு செயலில் இறங்கும்போது தான் அதில் முழு வெற்றியும் கிடைக்கும். அதனபடி ஆஞ்சிநேயரை முழுமனதுடன் சில வழிபாடுகளுடன் வேண்டிக் கொள்வதால் நினைத்தது நடக்கும். செய்யும் காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அவருக்கு வியாழக் கிழமைகளில் வழிபாடுகள் நடத்தி வந்தால் நிச்சயம் ஜெயமே.
வழிபாடுகள்:
இந்த வழிபாட்டுக்கு ஆடம்பர பொருட்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மட்டுமே இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். இதற்கு தேவையானது முழு தேங்காய், சுத்தமான மஞ்சள் துணி & ஒரு ரூபாய் நாணயம்.
முதலில் பூஜையறையில் அனுமனை மனதார வேண்டி விளக்கேற்றிக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காயை நன்கு கழுவி அதில் மஞ்சள், குங்குமம் வைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் துணியின் மேல் தேங்காயை வைத்து ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து கட்டிக் கொள்ளவும். தேங்காயை தலைகீழாக வைத்து கட்டக் கூடாது. நேராக வைத்து தான் கட்ட வேண்டும்.
இப்பொழுது உங்கள் மனதார அனுமனை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து 11 நாட்கள் இவ்வாறு வழிபட வேண்டும். நாம் எந்த காரியத்தை நினைத்தாலும் நிறைவேறும். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் கடவுளை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. நடப்பதற்கான பாதையை தான் அவர் காட்டுவார். இந்த வழிபாடுகள் மூலம் நாம் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும். முழு மனதுடன் செய்வது முக்கியம்.