தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிநிலை குரூப் 2 2A காண தேர்வை நடத்தியது. இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதன்மை தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து TNPSC தேர்வாணையம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நேர்முகத் தேர்வு உடைய பதவிகளுக்கு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களை மட்டும் வெளியிட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இதில் தேர்ச்சி பெற்றோருக்கான நேர்முக தேர்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தகுதி பெறுவோருக்கு வருகிற 21ம் தேதி கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.