தமிழ்நாடு தொழிற்சாலைப் பணி தேர்வுகள் தேதி ஒத்திவைப்பு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

0

மிழ்நாடு தொழிற்சாலைப் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும்  உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

TNPSC அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று (ஏப்ரல் 7 2020) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09.12.2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34/2019 இல் ஏப். 25, 26 2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது, கொரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும், தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும்  உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here