தமிழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, கடந்த பிப்.19ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.20) வேளாண் நிதி நிலை அறிக்கையை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்றுடன் (பிப்.22) சட்டப்பேரவை கூட்டம் முடிவடைய உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பரபரப்பாக நடைபெற்றது.
தமிழக ரேஷனில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்?? அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!!!
அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கான நிதியுதவி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு-யிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த அவர், “மின்வாரிய ஊழியர்கள் பணி நேரத்தின் போது, உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.