மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி மட்டுமல்லாமல் பயணப்படி-யும் (TA) 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி., அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் X நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 30 சதவீதம் எனவும், Y நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 21 சதவீதம் எனவும், Z நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 12 சதவீதம் எனவும் பயணப்படி (TA) உயர வாய்ப்புள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வோடு பயணப்படி-யும் உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உச்சத்தை தொடலாம் என பலரும் பேசி வருகின்றனர்.