கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக குடும்ப தலைவிக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் கடந்த வாரம் முதலே விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூலை 24 ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த விண்ணப்ப பதிவு தொடங்கி நேற்றுடன் (ஜூலை 26) மூன்று நாட்கள் கடந்த நிலையில், இதுவரை 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இத்திட்டம் குறித்து இன்று தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில், மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான அப்டேட்களை தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் முதல் ஓய்வூதியம் ரூ. 4,016 ஆக உயர்வு…, இவங்களுக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு!!