தமிழக குடும்ப தலைவிகளே., ரூ.1,000 உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம்., திமுக எம்.பி. கனிமொழி பகீர்!!!

0

தமிழகத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் “கலைஞர் மகளிர்” திட்டத்தை, திமுக தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான 1.7 கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் வர இருப்பதால், கலைஞர் மகளிர் திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி அவர்கள், திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது “விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, 3 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றால், தமிழக முதல்வர் வழங்கி வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே அலர்ட்.., இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here