தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்து 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. தற்போது இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர பகுதி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று பிப்ரவரி 28 முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இது தவிர இன்றும், நாளையும் உள் தமிழகத்தில் அதிக வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.