தமிழகத்தில் தகுதியான ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அண்மையில் விநியோகிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1 கோடியே 64 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் கள ஆய்வு உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடித்து வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களின் பட்டியலை அரசிடம் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன்மூலம் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான மறுபரிசீலனை குறித்து சப் கலெக்டர் அல்லது RTO-விடம் முறையிடவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!