தொடர்ந்து மாறி வரும் பருவநிலை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., MCLR வட்டி விகிதம் உயர்வு., அக்டோபர் 7 முதல்!!!