தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வானிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த வானிலை மாற்றத்தால், வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.