தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது இன்றும் நாளையும் (பிப். 20 & 21) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
ஆனால், பிப்ரவரி 22 மற்றும் 23ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும். இருப்பினும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவும். பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இத்தகைய வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.