நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் வருவதையொட்டி, கடந்த பிப்.1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் தள்ளுபடி செய்வது குறித்து விவரித்து இருந்தார். அதன்படி 2009-10 நிதியாண்டு வரையில் ரூ.25,000 மற்றும் 2014-15 நிதியாண்டு வரையில் ரூ.10,000 வரையிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் கூறப்பட்டது.
தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்நிலையில் அபராதம், செஸ் மற்றும் வட்டி ஆகியவற்றை உள்ளடக்கி, சிறிய நிலுவையில் உள்ள வருமான வரி கோரிக்கைகளையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அதிகபட்ச உச்சவரம்பாக ரூ.1 லட்சத்தையும் நிர்ணயித்துள்ளனர். இதனால் வரி செலுத்துவோர் பலரும் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.