தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென இன்று அதிகாலை இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கிடையில், சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று (செப்டம்பர் 21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.