தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தில் 569 பேர், ஆங்கிலத்திற்கு 656 பேர் என 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தகுதியான தேர்வர்கள் இன்று (மார்ச் 14) முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு 2024 ஆகஸ்ட் 8ஆம் தேதி தேர்வு நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளத்தை பார்வையிடலாம்.
Enewz Tamil WhatsApp Channel
TN TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக சிறந்த வழி இதோ.., உடனே Apply பண்ணுங்க!!!