தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரின் அறிக்கை தயார்?