தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் கடந்த மாதத்தில், நியமன தேர்வு ரத்து, பணி நிலைப்பு வழங்குதல், சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஆசிரியர்கள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், “ஆசிரியர்களின் கோரிக்கைகள் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றும் தருவாயில் இருப்பதாகவும்” பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.