தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லாவண்யா திரிபாதி. தற்போது எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர்,தெலுங்கு நடிகர் வருண் தேஜை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இதனை தொடர்ந்து இருவீட்டாரும் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய நிலையில், கடந்த மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் பல தெலுங்கு முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன். சிரஞ்சீவியின் மெகா குடும்பத்து திருமணம் என்பதால் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், ராம்சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.