தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் ஜனவரி 3 அதாவது இன்று திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் மீண்டும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.