தமிழக விவசாயிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

0
தமிழக விவசாயிக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்
தமிழக விவசாயிக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்

கர்நாடகா மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம், சீராப்பள்ளி கிராமம், குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி க/பெ. பொன்னுசாமி அவர்களுக்கு 2017-2018 ம் ஆண்டில் எள் பயிரில் அதிக மகசூல் எடுத்த காரணத்திற்காக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவருக்கு நமது பிரதமர் மோடி அவர்களின் கையால் ரூ. 2,00,000/- ஆன காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இவ்வாறாக நமது மாநிலத்திற்கு பெருமைத் தேடித் தந்த விவசாயிக்கு நமது பாராட்டுகளைத் தெரிவிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here