தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு TN TRB தேர்வு வாரியத்தின் மூலம் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் நிரப்பப்படாமல் பல காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசு செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது பட்டதாரி ஆசிரியர்களுக்கான உபரிப் பணியிடங்களை கண்டறிந்து மே 31ம் தேதிக்குள் பணி அமர்த்த வேண்டும். மேலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதுபோக இன்னும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் அதை அரசுக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.