ஏழை எளிய & நடுத்தர குடும்பங்களுக்கு நியாய விலை கடைகளின் மூலம் உணவு பொருட்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. அதுபோல அரசு அவ்வப்போது வழங்கும் உதவித்தொகைகளும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்களை பெற தகுதிவாய்ந்த புதிய ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து நீக்கம் செய்யும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் பஞ்சாப் அரசு 10.77 லட்சம் ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்திருந்தது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 10.77 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாக நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் அறிவித்துள்ளார்..