தமிழக ரயில் பயணிகளே…, இனி இந்த ரயில் நிலையம் செயல்படாது…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
மக்களின் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், ரயில் நிலையங்களை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தியும் வருகிறது. இதற்கிடையில், தமிழக ரயில்வே நிர்வாகமானது நீண்ட நாட்களாக சரி வர செயல்படாமல் இருக்கும் ரயில் நிலையங்களை கணக்கெடுத்துள்ளது.
இதன்படி, கரூர் மற்றும் சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்வது வழக்கம். ஆனால், சில மாதங்களாகவே இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வரத்து என்பது மிக குறைவாக உள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகமானது, இனி எந்த ரயில்களும் வாங்கல் ரயில் நிலையத்தில் நிற்காது என்றும் இன்று மட்டுமே கடைசியாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வாங்கல் ரயில் நிலையத்தில் இருந்தும், பிற ரயில் நிலையங்களில் இருந்தும் பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்துக்கு பயணச்சீட்டு வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here