தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இன்று (நவ.9) மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.