தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி நேற்று மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதை தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் முக்கிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.