ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 8 போட்டிகளில் இந்தியா (16), தென் ஆப்பிரிக்கா (12), ஆஸ்திரேலியா (12) ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, அதிக புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்க தலா 8 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து (+0.398), பாகிஸ்தான்(+0.036) மற்றும் ஆப்கானிஸ்தான்(-0.338) ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து அணி அதிக ரன் ரேட் வைத்திருப்பதால், இன்று (நவம்பர் 9) இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள தனது கடைசி லீக் போட்டியை வென்றால், உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி போடு.., இயக்குனரில் இருந்து நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்? அவரே சொன்ன அந்த பதில்!!