தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும், இந்த தேர்வு மூலம் 1,500 பேருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் என 2 வருடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடத்தப்பட்ட திறனறிவு தேர்வுக்கான முடிவுகள், தற்போது வெளியிட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ (or) https://apply1.tndge.org/nts-result-change-2022 என்ற இணையதள முகவரியில், தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தை மிரட்ட வரும் புயல்., இந்த பகுதி மீனவர்களுக்கு தடை., அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!!