தமிழக பள்ளிகளின் திறப்பு எப்போது???

0

தமிழகத்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 23ம் தேதியில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊரக உள்ளாட்சி  தேர்தல் பணியில் ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 25 முதல் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில்  அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 3 இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதற்கு பதிலாக ஜனவரி 6 இல்  பள்ளிகளை திறக்க வேண்டும் என  ஆசிரியர்கள் தமிழக அரசை வலியிறுத்துள்ளனர். 

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் துரைராஜ் கூறுகையில் ஜனவரி 2 அன்று ஒட்டு எண்ணிக்கை நடை பெறவுள்ளது. அன்று நள்ளிரவு வரை பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். அதன் பின்  மறுநாள் காலை பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் . ஆகையால் ஜனவரி 6 இல் பள்ளியை திறக்க வேண்டும் என  ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முதல்வர் பழனி சாமி, மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here