அண்ணா பல்கலையில் பருவ தேர்வு ஜன. 4 முதல் தொடக்கம்

0

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு அரசு விடுமுறைகள் ஆகிய காரணங்களுக்குகாக கல்லூரி மற்றும் பல்கலைகளுக்கு விடுமுறை அளித்தது உயர்கல்வி துறை.

இதைத் தொடர்ந்து கல்லூரி விடுதிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் டிச. 21 முதல் நடைபெறவிருந்த பருவ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

தற்போது விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரி திரும்பியதை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் ஜன.4 முதல் தொடங்கும் எனவும் பழைய அட்டவணையில் உள்ள தேர்வுகளுக்கு ஜன.10 வரையும் தேதி நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் முன்கூட்டியே தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here