தமிழக பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி தான்…, வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழக பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி தான்..., வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி தான்..., வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் இப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 7 ஆம் தேதியில் திறக்கப்படவுள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் 7 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் நடந்து கொண்டுள்ளது. மேலும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, ஜூன் 9 ஆம் தேதி 3 மணி முதல் 4.30 வரை அரசு பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மை குழு கூட்டம்’ நடைபெற வேண்டும். அதில் பள்ளி இடை நிற்றல் குறித்த விவரங்களை விவாதிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் குழந்தைகள் யாரேனும் சேராமல் இருந்தால் பெற்றோர்களை சந்தித்து அவர்களை பள்ளியில் சேர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் 5, 8,10,11 ஆம் வகுப்பு மணவறைக்கு தேர்ச்சி பெற்று அடுத்து வகுப்பு சென்று விட்டார்களா?? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடை ஊழல் விவகாரம்.., சோதனையில் இறங்கிய அதிகாரிகள்.., உணவுத்துறை உத்தரவு!!

பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு , துணைத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மேற்படிப்பை தொடர வழிவகை செய்வதோடு அதை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here