தமிழ் நாட்டில் வறுமை கோடு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் மத்திய அரசு ரேஷன் கடை மூலமாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் அரிசி கோதுமை இலவசமாகவும் சர்க்கரை துவரம் பருப்பு பாமாயில் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த பொருட்களின் செலவுக்காக இந்தாண்டிற்கு அரசாங்கம் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் ரேஷன் கடைகளில் பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் அரிசி வாங்குவதில்லை. அதை சாதகமாக எடுத்துக்கொண்டு அந்த அரிசியை சில ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
அதுமட்டுமின்றி அந்த ஊழியர்கள் மாத கடைசியில் வாங்காத பொருட்களை வாங்குவது போல் கணக்கு காட்டி வருவதாக புகார்கள் எழுகின்றன. தற்போது அதிக விற்பனை செய்யப்பட்ட ரேஷன் கடைகளில் சோதனை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.