தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஏப்ரல் 2வது வாரம் முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைய இருக்கிறது.
கேரளாவில் விஜய்.. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
எனவே 1 முதல் 9ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஆலோசனை கூட்டம், இன்று (மார்ச் 19) நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து, இன்னும் ஓரிரு தினங்களில் ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.