நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சலுகைகள் அனைத்தையும் தகுதியான மக்கள் பயன்பெற பல்வேறு பாதுகாப்பு திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக KYC யை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
மேலும் இதற்கான கால அவகாசத்தையும் கொடுத்த நிலையில் உத்தரப்பிரதேச அலுவலர் ஆனந்த் பிரதாப் சிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஒரு கார்டுதாரர் தனது ரேஷன் கடையில் இருந்து உணவு தானியங்களை பெறுவதில் ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், அவர் அவற்றை வேறு எந்த கடையில் இருந்தும் பெயர்வுத்திறன் மூலம் பெறலாம் . வருகின்ற மார்ச் 29ஆம் தேதிக்குள் மொபைல் வெரிஃபிகேஷன் செய்யப்படும் என கூறி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.