தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பயனர்களுக்கு மாதம் தோறும் கேழ்வரகு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கேழ்வரகு விநியோகம்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் மற்றும் இதர சமையல் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் சிறுதானிய உணவுகளையும் சேர்க்க உள்ளதாக சமீபத்தில், உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் அடிப்படையில், 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ கேழ்வரகு வீதம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக இந்த பயிர் அதிகம் விளையும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதியில் 9 நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து, இதனை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
“குரூப் பி” பதவிக்கு போட்டி தேர்வு வேணாம்., தேர்வர்களின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?
இதுபோக, தேவை ஏற்பட்டால் கேழ்வரகை நேரடியாக மத்திய அரசிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், கேழ்வரகு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அரசின் இந்த முக்கிய திட்டத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.