மாநிலத்தில் காலியாக உள்ள 600, அமைச்சக உதவியாளர் பதவிகளை மேல்நிலை எழுத்தாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என புதுவை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை:
மாநிலத்தில் ஏற்படும் காலி பணியிடங்களை, அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் காலியாக உள்ள 600 அமைச்சக உதவியாளர் பணியிடங்களுக்கு, 20% நேரடி நியமனம் மற்றும் 20% போட்டி தேர்வு மூலமும், நேரடி நியமனத்திற்கான தேர்வு அகில இந்திய அளவிலும் நடத்தப்படும் என புதுவை அரசு அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுகுறித்து பேசிய, ஊழியர் சங்க தலைவர், “குரூப் பி” பதவியான இதை, ஏற்கனவே பணியில் உள்ள மேல்நிலை எழுத்தாளர்களைக் கொண்டு நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது போன்ற சிறிய அளவிலான பணிகளுக்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது மாநில தேர்வுகளின் உரிமையை தட்டி பறிக்கும் எனவும் தெரிவித்தார். எனவே, உடனடியாக இதில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.