தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 13-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்துள்ளது. இதனால் இன்று கூட 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டத்தின் நிலைமைக்கு ஏற்ப விடுமுறையை முடிவு செய்வதும், தேர்வுகளை ஒத்தி வைப்பதும் குறித்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு எடுக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here