தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் – கல்வித்துறை எடுத்த திடீர் முடிவு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் - கல்வித்துறை எடுத்த திடீர் முடிவு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புகளை தொடர்வது குறித்த, முக்கிய அறிவிப்பு ஒன்று கல்வித்துறை சார்பில் இருந்து அதிரடியாக வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிரடி :

தமிழகத்தில் அடுத்த மாதம், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்த ஆண்டு பொது தேர்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு விடப்படும் இந்த தொடர் விடுமுறையால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் என பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இது போன்ற தொடர் விடுமுறை காலங்களில் ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் நடத்த, தனியார் பள்ளிகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பால் பாக்கெட் விலை மீண்டும் உயர்வு – லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை, தனியார் பள்ளிகள் எடுத்துள்ள இந்த முடிவுக்கு தடை இல்லை என்றும், அவர்கள் விரும்பினால் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here