ISL 2022: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கோவா…, ஈஸ்ட் பெங்காலை எதிர்த்து சென்னை அணி இன்று பலப்பரீட்சை!!

0
ISL 2022: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கோவா..., ஈஸ்ட் பெங்காலை எதிர்த்து சென்னை அணி இன்று பலப்பரீட்சை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், கோவா அணி தனது சொந்த மண்ணில் ஜாம்ஷெட்பூர் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் கெத்து காட்டி வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ISL):

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து கோவா அணி தனது சொந்த மண்ணில் போட்டியிட்டது. இந்த போட்டியில், கோவா அணியின் இகர் குரோட்க்சேனா ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவரை தொடர்ந்து, நோவா சதாயுய் கோவா அணி சார்பாக 12 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதன் மூலம், கோவா அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கிய, ஆட்டத்தின் 2 வது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் அடிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து மட்டுமே வந்தனர்.

T20 WC 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இந்த இரு அணிகள் தான்…, அடித்துச் சொன்ன ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!!

ஆனாலும், ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், கோவா அணி ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், தனது சொந்த மண்ணில் கோவா அணி கெத்து காட்டியதுடன், இந்த லீக்கில் 4 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தக்கவைத்து கொண்டது. இந்த லீக் தொடரில் இன்று, சென்னை அணி ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here