அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அண்மையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்கள் நாளை (அக்டோபர் 12) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “ஒவ்வொரு ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்து இருந்தேன். இதுவரை எந்த ஒரு ஆசிரியர் இயக்கங்களும் என்னை சந்திக்க வரவில்லை. இவர்கள் அனைவரும் என்னுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்காக வரலாம். அவர்களுக்காக என் இல்லத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.” என கூறியுள்ளார்.
அதிகரிக்கும் பாலியல் புகார் .., டெல்லி அரசு எடுத்த அதிரடி முடிவு? என்னனு தெரியுமா?