தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசானது, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத் தொகையை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வருடந்தோறும் வழங்குவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக நேற்று (ஜனவரி 7) முதல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பலருக்கும் இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்க மறுக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடை ஊழியர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்து, மற்றவர்களுக்கு டோக்கன் வழங்க மறுக்கின்றனர். இதையடுத்து, அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகான டோக்கன் வழங்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ICC சிறந்த வீரர், வீராங்கனை விருது.. பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள்..!!