பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக அமிர்தா எழிலுடன் தான் வாழ போகிறேன் என போலீசிடம் சொல்லிவிடுகிறார். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக உள்ளனர். இன்னொரு பக்கம் செழியனின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்திலும் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கோபி தலைக்கு ஏற குடித்துவிட்டு கிச்சனில் அடுப்பை பற்ற வைக்காமல் சுடுதண்ணீர் காயவில்லை என பாக்கியா செல்வியிடம் ரகளை செய்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.
பின் தண்ணீர் கொஞ்சம் கூட சூடகவில்லை என்று சொல்ல ஆத்திரத்தில் ராதிகா கோபியின் கையை அடுப்பில் வைக்கிறார். இதைப் பார்த்து செல்வி, பாக்கியா அதிர்ந்து போகின்றனர். பின் கோபியை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி குடிக்கிறீங்க என்று ராதிகா கேட்கிறார். உடனே பசங்க பிரச்சனையை காரணம் சொல்ல ராதிகா அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். பின் கோபி இந்த விஷயத்துக்கு ராதிகா இவ்வளவு கோபப்படுறா. ஆபீஸ பூட்டி சீல் வச்ச விஷயம் மட்டும் தெரிஞ்சா என்னெல்லாம் நடக்குமோ என மனதுக்குள்ளேயே புலம்புகிறார்.