பள்ளிகளில் ஜனவரி 13 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் கிடையாது…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

0
இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கனமழை, கடும் பனிப்பொழிவு என மாறி மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், அதிக கனமழை அல்லது பனி பொழிவு பொலிந்தாலோ மற்றும் வானிலை முன்னறிவிப்பின் அறிக்கைப்படி பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது சண்டிகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், சண்டிகரில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி வரை நேரடி வகுப்பு இருக்காது எனவும், மாறாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க கூடும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here